மணமாலை 01 சென்னை 03-05-2025 | 24மனையார் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள் மணமாலை நிகழ்ச்சிகள் இணையத்தளம் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையதள மணமாலை நிகழ்வுகள் பெரும்பாலும் வியாபார நோக்கில் நடந்து வருகின்றன அவை எல்லாம் பெரும் தொகையை பதிவு கட்டணமாக பெற்றுக்கொண்டு நமது அனைத்து விவரங்களையும் சேகரித்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், நம் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட், கீழ்பாக்கம், சென்னை - நடத்தும் மணமாலை நிகழ்வானது முற்றிலும் வித்தியாசமானது சமூகத்தினர் பயன்பெறும் நோக்கத்துடன் மட்டுமே நடத்தப்படுகிறது. முன் பதிவுகள் இலவசம்தான். ஆனால், முன்பதிவு இருந்தால் மட்டுமே மணமாலை நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். முன்பதிவுகள் இல்லாமல் அனுமதி இல்லை. இது தரகர்கள் மற்றும் வியாபார நோக்கத்துடன் இருப்போரைத் தவிப்பதற்காக மட்டுமே. வரனின் ஜாதகம் மற்றும் புகைப்படம் தருவது அவரவர்கள் விருப்பம். கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வரன் வீட்டாரிடம் நீங்களே பகிர்ந்து கொள்ளலாம். ஒரு சில பெண் வீட்டார் ஜாதகம் மற்றும் போட்டோக்கள் தவறாக பயன் படுத்தப்படுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறார்கள். அந்த அச்சம் இங்கே தேவையில்லை, ஏனென்றால் பதிவு செய்ய புகைப்படம், ஜாதகம் தர வேண்டிய கட்டாயம் இங்கு இல்லை. மணமாலை அதிக பகுதிகளில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சிறப்பாக நடத்தப்படும் எல்லா வரன்களுக்கும் ஒரு 5 நிமிடம் வரை மேடையில் பேசுவதற்கு, அவர்கள் வரனை பற்றியும், குடும்பத்தை பற்றியும் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். வட்ட மேஜைகள் அமைத்து பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் தனியாக உரையாட இடம் கொடுக்கப்படும். இதற்கென நமது சமூகத்தில் பெரியவர்கள் பேச்சு வார்த்தை நடத்த தேவைப்படும் வரன் வீட்டாருக்கு (உதவிக்கு / on request only / தேவையானவர்களுக்கு மட்டும் அவர்களது வேண்டுதலுக்கு இணங்க) இருப்பார்கள். மணமாலை நிகழ்ச்சி நடக்கும் அரங்குகளில் வரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எந்த விதமான தரகர்கள் / வியாபார நோக்கத்தில் வரும் நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆயிரக்கணக்கில் வரன்களை ஒரே நிகழ்வில் அழைத்தால் அனைவருக்கும் நேரம் கொடுக்கமுடியாமல் போய்விடும். அதனால் 8வீடு / 16வீடு என்று வரன்கள் மேடையற்றப்படுவார்கள். வருபவர்கள் தங்கள் விருப்பம் போல் மேடை ஏறி பங்கு பெறலாம். எதிர்பார்ப்புகள் ஒருவருக்கொருவர் மாறுபடுவதால், மேடை அறிமுகத்தால் மட்டுமே அவரவர்க்குப் பொருத்தமான வரன்களைத் தேர்ந்தெடுக்க முடியும் இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான், பதிவுகளை ஆய்வு செய்து அவரவர் எதிர்பார்ப்புகளை பொருத்தி பார்த்து , பொருந்தக்கூடிய வரன்களை ஒரே நேரத்தில் அழைத்து அவர்களுக்கு சந்திக்கும் நேரத்தை விரிவு படுத்தி கொடுப்பது திருமண பந்தம் அமைய வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும். வரன் தேடும் 24 மனையார் அனைவரும் இந்த google படிவத்தில் விண்ணப்பித்து பலன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் மணமாலைக்கு வரும் வரன்கள் 24மனையார் குலமுரசு சந்தா செலுத்தி பத்திரிக்கையிலும் தங்களது வரன்கள் பற்றிய விவரங்களை வெளியிட மண மாலை நிகழ்வுகளில் ஏற்பாடு செய்யப்படும். 24மனையாரின் பெருமை நமது இனத்திற்கான செய்தி மாத இதழ், குலமுரசு. அந்த பெருமைமிகு இதழில் வரன்கள் பற்றிய முழு விவரங்கள் அனைவரும் பதிவு செய்து பயனடையலாம். குலமுரசு மாத இதழில் முன்பே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை google படிவத்திலும் பதிவேற்றி ஒத்துழைப்பு நல்கவும் நமது சமூக மக்கள் அனைவரும் இந்த மணமாலை நிகழ்வு செய்தியை அனைத்து பகுதியும் மக்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் பலன் பெறும் வகையில் அமைத்து தர வேண்டுகிறோம். இப்படிக்கு, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை சங்கம் மற்றும் 24மனை தெலுங்கு செட்டியார் சாரிட்டபிள் டிரஸ்ட் கீழ்பாக்கம், சென்னை. Mobile 86 08 16 24 24 Google link கூகிள் ஃபார்ம்ஸ் மணமாலை பதிவு |